என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்
நீங்கள் தேடியது "உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்"
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் களம் இறங்கியுள்ள நிலையில் பி.எஸ்.பி. கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கட்சி, யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது.
இந்தமுறை பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. கொரோனா 2-வது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த சம்பவம், லக்கிம்பூர் சம்பவம் ஆகியவை சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாயாவதி கூறுகையில் ‘‘சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. எந்தக்கட்சியுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்யாது. எங்களுடைய பலத்தில் தனித்து போட்டியிடுவோம். அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து அவர்களுடன் கூட்டணி வைப்போம். அது நிலையான கூட்டணி. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை’’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X